திருமணம் ஆகி 15 வருடங்களுக்கு பிறகு இரண்டாம் குழந்தைக்கு அப்பாவான பிரபல முன்னணி நடிகர்!! யார் அந்த நடிகர்!! என்ன குழந்தை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் நரேன் அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார். இவர் முதலில் மலையாள சினிமாபோல் பிரபல நடிகராக வளம் வந்தார் இவர் தமிழில் முதன்முதலில் மிஷ்கின் இயக்கிய ’சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் அதன் பிறகு அவர் ’நெஞ்சிருக்கும் வரை’ ’பள்ளிக்கூடம்’ ’அஞ்சாதே’ போன்ற படங்களில் நடித்தார். அதுமட்டுமின்றி தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படமான ’விக்ரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு  தொலைக்காட்சி நடிகை மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஏற்கனவே தன்மயா என்ற 14 வயதில் ஒரு மகள் உள்ளார். சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிவித்துள்ளார். தற்போது இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

15 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் குழந்தையை பெற்றடுத்துள்ளனர். இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றன..