திரையுலகை பொறுத்தவரை தற்போது இருக்கும் காலகட்டத்தில் பல மொழிகளில் நடித்து வரும் நடிகைகள் கூட சில மொழிகளில் தான் பிரபலமாக இருந்து வருகிறார்கள். அப்படி சில மொழி படங்களில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் மிக பெரிய வெற்றியினை பெற்று அவர்கள் பிரபலமாகி விடுகின்றன.
இதன் காரணமாக சினிமாவில் இருக்கும் அனைத்து பிரபலங்களும் பல மொழி திரைப்படங்களிலும் நடித்து சினிமாவில் தனது பெயரை நிலை நாட்டி இருக்கிறார்கள். அப்படி மலையாள சினிமாவில் சமீபத்தில் மிக பெரிய வெற்றியினை பெற்ற படமாக இருந்தது லூசிஃபர். இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 175 கோடி வரை வசூல் சாதனை செய்தது.
மேலும் இந்த படத்தில் நடிகர் மோகன்லாலுடன் மலையாளத்தில் பல பிரபலங்கள் சேர்ந்து நடித்த இந்த படம் தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று பிருத்திவி ராஜ் முடிவு செய்துள்ளாராம். தற்போது அதே கூட்டணியில் அடுத்து ஒரு படமாக ‘ப்ரோ டாடி’ என்ற படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது. அதாவது இரண்டாம் உலகப் போரில் அ கதிக ளாக இருக்கும் அப்பா மக்களுக்கான பாசத்தை வைத்து குடும்பப் பாங்கான திரைப்படமாக மாற்றி இருக்கின்றார்கள்.
சமீபத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டு பாகத்திலும் நடிகர் மோகன்லால் மற்றும் மீனாவின் ஜோடிப் பொருத்தம் அற்புதமாக இருந்தது. எதார்த்தமான நடிப்பில் இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அடுத்து எடுக்கும் சில படங்களுக்கு கூட நடிகர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மீனாவை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
இனி இவர்கள் நடிக்கும் படங்களில் எல்லாம் அதிகமாக இந்த ஜோடியை தான் பார்க்க முடியும் என்றும் கூறி வருகின்றார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வரும் இந்த தகவல்கள் சமுக வளைதங்களில் வை ரலாகி வருகிறது..