விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் அஜய் கிருஷ்ணா.
இவர் குரல் மாற்றி உதித் நாராயணன் போல் படுவதை தான் அனைவரும் அதிகமாக ரசிப்பார்கள். கடந்த மே 13 ஆம் தேதி அஜய் கிருஷ்ணாவுக்கும் ஜெஸிக்கும் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கண்ணான கண்ணே பாடலை அஜய் பாடின வீடியோவை பார்த்து அவரிடம் பேச ஆரம்பித்தவர் தான் ஜெஸ்ஸி.
ஆரம்பத்தில் நட்பாக இருந்த இவர்களுடைய உறவு அதற்கு பின் காதல் மலர்ந்தது. பிறகு இருவருடைய வீட்டிலும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்தார்கள். இந்நிலையில் தற்போது அனைவருக்கும் நல்ல செய்தியை கூறியுள்ளார் அஜய் கிருஷ்ணா.
அதாவது தனது மனைவி ஜெஸி க ர்ப் பமாக இருக்கிறார். என்று மகிழ்ச்சியான பதிவை அஜய் கிருஷ்ணா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..